search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry enters"

    நாமக்கல்லில் சாலையோர கடைக்குள் லாரி புகுந்து மோதியதில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
    நாமக்கல்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் நாமக்கல் அருகே வந்தது. வள்ளிபுரம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த பேக்கரியுடன் இணைந்த டீக்கடைக்குள் புகுந்தது.

    இந்த விபத்தில் கடையில் டீ குடித்து கொண்டு இருந்த கீரம்பூரை சேர்ந்த கண்ணன் (31) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. கடையின் முன்புற கட்டிடமும் சேதம் அடைந்தது. இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நல்லிப்பாளையம் போலீசார் லாரி டிரைவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து கண்ணனின் மனைவி ஷீலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, டிரைவர் பாலகிருஷ்ணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவரின் தூக்கமே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விபத்தில் இறந்த கண்ணன் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×