search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lodge owner"

    • கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது.
    • தலைமறைவான மவுலியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ் பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் இக்கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது. இங்கு விபச்சாரம் அதிக அளவு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை, கொரட்டூரை சேர்ந்த பிரியதர்ஷினி(வயது23) என்ற இளம் பெண் நேற்று முன்தினம் வேலை தேடி பெரியபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சென்னை, கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குகன்(வயது24) என்பவர் வீட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவிலின் எதிரே உள்ள கார்த்திக் லாட்ஜுக்கு இளம் பெண்ணை அழைத்து வந்து தங்க வைத்தார்.

    பின்னர், பெரியபாளையம், தண்டுமாநகரை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் கார்த்திக்(வயது35) மற்றும் குகன், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த மவுலி ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து அநாகரீகமாக பேசி திட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரியதர்ஷினி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் மற்றும் குகனை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான மவுலியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் என்பவர் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் என்றும், முடி வியாபாரி என்றும், தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×