search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "locked house and"

    • வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • தங்கச்சங்கிலி மற்றும் மோதிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், வாய்ப்பாடி ரோட்டில் எஸ்.எம்.ஏ. தோட்டத்தில் குடியிருந்து வருபவர் ரத்தினசாமி (வயது 43).

    இவர் ஜே.சி.பி. எந்திரம் வைத்து எர்த் மூவர்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று சேர்வைக்காரன் பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டின் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

    பின்னர் மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளது.

    அதில் வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரத்தை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.

    இதனையடுத்து ரத்தினசாமி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ×