என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Local Traffic Officer"
- வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் பசுவந்தனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமலும், காப்புச்சான்று இல்லாமலும் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை முறையான ஆவணங்கள் இல்லாமலும், அதிகமான வேகத்திலும் இயக்குவதாக கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
இதனைத்தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் பசுவந்தனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆட்டோக்கள் உரிய சான்றுகள் இல்லாமலும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமலும், காப்புச்சான்று இல்லாமலும் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனத்திற்கு ரூ. 7500 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் அபராதத் தொகையை செலுத்திய பின்பு அவை விடுவிக்கப்படும். பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையான ஆவணங்களுடன் அனுமதிக்கப்பட்ட அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல வேணடும். மிதமான வேகத்திலே வாகனத்தை இயக்க வேண்டும். விதிமீறி இயக்கினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்