search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Legal Awarness Program"

    • ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மோட்டார் வாகன காப்பீட்டுத் திட்டம் போன்றவைகளைப் பற்றி பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விளக்கி கூறினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தலைமையில் 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், மோட்டார் வாகனச் சட்டப்பிரிவுகள், அச்சட்டத்தினைப்; பின்பற்றுதல், சாலை விபத்து கோரிக்கைகள் மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டுத் திட்டம் போன்றவைகளைப் பற்றி தெளிவாக ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விளக்கிக் கூறினார். ராஜபாளையம் ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற அனுமதி வழங்கிய முதல்வர் டாக்டர் எஸ். அருண் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் நன்றி கூறப்பட்டது.

    ×