search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leaf curl disease"

    • சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் இலை சுருட்டல் மற்றும் வேர் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
    • இந்த முறையை செயல்படுத்தினால் இலை சுருட்டல் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடலாம் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டில் சுமார் 850 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பூ பூக்கும் தருணத்தில் உள்ள மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய் பரவி வருகிறது. அதனால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அபிராமம் விவசாயி கூறுகையில், இந்த ஆண்டு பருவகாலத்தில் போதிய மழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பொருளாதார கஷ்டத்தில் சிரமப்படுன்றனர்.

    இந்த நிலையில் மிளகாய் செடியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இலை சுருட்டல், வேர் பூச்சி போன்ற நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மிளகாய் விவசாயத்தில் பெரிய நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக தோட்டக்கலை துறையினர் மிளகாய் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து தோட்டகலைத் துறையி னரிடம் கேட்ட போது, தற்போது பனி மற்றும் குளிர் காலம் என்பதால் பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் இலை சுருட்டல் மற்றும் வேர் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.

    15 நாட்கள் இடைவெளியில் 2 முறை மருந்தை தண்ணீரில் கலக்கி ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும். இந்த முறையை செயல்படுத்தினால் இலை சுருட்டல் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடலாம் என்றனர்.

    ×