என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Leaf curl disease"
- சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் இலை சுருட்டல் மற்றும் வேர் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
- இந்த முறையை செயல்படுத்தினால் இலை சுருட்டல் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடலாம் என்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டில் சுமார் 850 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பூ பூக்கும் தருணத்தில் உள்ள மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய் பரவி வருகிறது. அதனால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அபிராமம் விவசாயி கூறுகையில், இந்த ஆண்டு பருவகாலத்தில் போதிய மழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பொருளாதார கஷ்டத்தில் சிரமப்படுன்றனர்.
இந்த நிலையில் மிளகாய் செடியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இலை சுருட்டல், வேர் பூச்சி போன்ற நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மிளகாய் விவசாயத்தில் பெரிய நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக தோட்டக்கலை துறையினர் மிளகாய் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தோட்டகலைத் துறையி னரிடம் கேட்ட போது, தற்போது பனி மற்றும் குளிர் காலம் என்பதால் பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் இலை சுருட்டல் மற்றும் வேர் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
15 நாட்கள் இடைவெளியில் 2 முறை மருந்தை தண்ணீரில் கலக்கி ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும். இந்த முறையை செயல்படுத்தினால் இலை சுருட்டல் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடலாம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்