search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laila Majnu"

    பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அசாதுதீன் ஒவைசி பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் வைத்துள்ள உறவு லைலா-மஜ்னு காதலை விட வலிமையானது என குறிப்பிட்டுள்ளார். #ModiNitishLove #Modi #NitishKumar #LailaMajnu #Owaisi
    பாட்னா:

    மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள கிசான்கஞ்ச் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் அக்தாருல் இமாம் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

    முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்தாருல் இமாமுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார்.

    பாஜகவுக்கு வாக்களிக்கா விட்டால் முஸ்லிம்கள் அரசு வேலைகளில் சேர முடியாது என்று பேசிய மத்திய மந்திரி மேனகா காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி, பாஜகவின் ‘சப் கா சாத் - சப் கா விகாஸ்’ (எல்லோருடனும் இணைந்து - எல்லோரின் நன்மைக்காகவும்) என்ற கோஷம் இதன் மூலம் பொய் என்று புலப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.



    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோரை கடுமையாக தாக்கிப் பேசிய அவர், மோடிக்கும் நிதிஷ் குமாருக்கும் இப்போதுள்ள உறவு மிகவும் வலிமையானது. லைலா-மஜ்னு காதலை விடவும் வலிமையானது.

    இந்த காதல் கதை புத்தகமாக எழுதப்படும்போது இவர்களில் யார் மஜ்னு? என்று என்னை கேட்காதீர்கள் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    ஆனால், இந்த லைலா-மஜ்னுவின் கதை எழுதப்படும்போது காதலுக்கு பதிலாக அதில் வெறுப்புணர்வு இருக்கும். இந்த ஜோடி ஒன்று சேர்ந்த பிறகு இந்தியாவில் இந்து-முஸ்லிம் இடையே பதற்றம் அதிகரித்தது என அதில் எழுதப்பட்டிருக்கும் எனவும் ஒவைசி கூறினார்.

    கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று முதல் மந்திரியான நிதிஷ் குமார், பின்னர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவுக்கு ஆதரவாக தனது போக்கை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiNitishLove #Modi #NitishKumar #LailaMajnu #Owaisi
    ×