search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lady missing"

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    • மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி குருலட்சுமி(28). இவர்களுக்கு ஹரிபிரகாஷ்(12), ஜெசிந்தா(10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    பின்னர் சமாதானம் செய்து மீண்டும் சங்கர் அழைத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் தேனி கோட்டைக்களம் பகுதியை சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமலதா(28). இவர் தனியார் பிஸியோ கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வழக்கு விசாரணைக்காக தனது தந்தை வீட்டிலிருந்து சென்ற பெண் மாயமானார்.
    • போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி தென்றல்நகர் தெற்கு தெருவை சேர்ந்த பாலு மகள் காயத்திரி (வயது36). இவருக்கும் பழனிவேல்ராஜன் என்பவருக்கும் திருமணம் நடந்து கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது விவாகரத்து வழக்கு தேனி குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக தனது தந்தை வீட்டிலிருந்து சென்ற காயத்திரி மாயமானார். தனது இளைய மகளின் பிறந்த நாளுக்காக கேக், டிரஸ் ஆகியவற்றை வாங்கி வைத்து விட்டு ஆட்டோவில் சென்றதாக அவரது தந்தை போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார். அதன்பேரில் போலீ சார் அவரை தேடி வருகின்ற னர்.

    ஜெயமங்கலம் அருகில் உள்ள ஏ.வாடிப்பட்டி கிழக்குத்தெருவை சே ர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (22). ஆட்டோ ஓட்டி வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை முத்தையா ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ×