search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டு  சென்ற பெண் மாயம்
    X

    கோப்பு படம்

    போடி அருகே விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டு சென்ற பெண் மாயம்

    • வழக்கு விசாரணைக்காக தனது தந்தை வீட்டிலிருந்து சென்ற பெண் மாயமானார்.
    • போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி தென்றல்நகர் தெற்கு தெருவை சேர்ந்த பாலு மகள் காயத்திரி (வயது36). இவருக்கும் பழனிவேல்ராஜன் என்பவருக்கும் திருமணம் நடந்து கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது விவாகரத்து வழக்கு தேனி குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக தனது தந்தை வீட்டிலிருந்து சென்ற காயத்திரி மாயமானார். தனது இளைய மகளின் பிறந்த நாளுக்காக கேக், டிரஸ் ஆகியவற்றை வாங்கி வைத்து விட்டு ஆட்டோவில் சென்றதாக அவரது தந்தை போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார். அதன்பேரில் போலீ சார் அவரை தேடி வருகின்ற னர்.

    ஜெயமங்கலம் அருகில் உள்ள ஏ.வாடிப்பட்டி கிழக்குத்தெருவை சே ர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (22). ஆட்டோ ஓட்டி வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை முத்தையா ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×