என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kovilaptti nurse house jewelry robbery
நீங்கள் தேடியது "kovilaptti nurse house jewelry robbery"
கோவில்பட்டியில் தனியார் மருத்துவனையில் பணிபுரியும் நர்ஸ் வீட்டில் நகையை கொள்ளையடித்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்தி தோப்பு ரோட்டில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அங்கயர்செல்வி (வயது35). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இவர்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்பொழுது வீட்டில் பீரோ அரிவாளால் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் கதவு திறக்கப்படாமல் பீரோ மட்டும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர்.
அப்போது உள்ளே இருந்த 6 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கணேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் பீரோவை உடைத்து நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். #Tamilnews
கோவில்பட்டி மந்தி தோப்பு ரோட்டில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அங்கயர்செல்வி (வயது35). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இவர்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்பொழுது வீட்டில் பீரோ அரிவாளால் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் கதவு திறக்கப்படாமல் பீரோ மட்டும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர்.
அப்போது உள்ளே இருந்த 6 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கணேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் பீரோவை உடைத்து நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X