என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kovai- trichy road"
- 4-வது விபத்தால் மக்கள் அச்சம்
- வேகத்தடைகளை 2 கார் டிரைவர்களும் கவனிக்கவில்லை
கோவை:
கோவை-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
ஏற்கனவே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து இறந்தனர்.இதனால் மேம்பாலம் தற்காலிகமாக முடப்பட்டு விபத்தை தடுப்பதற்கான பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
ஆனால்,வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். தொடர்ந்து 3 பேர் பலியானதால், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் (தடுப்புகள்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் 2 கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றது.
அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றபோது அங்கிருந்த வேகத்தடைகளை 2 கார் டிரைவர்களும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் திடீரென பிரேக் பிடித்ததில் 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து திருச்சி சாலை மேம்பாலத்தில் 4 விபத்துகள் எற்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்