search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kottur"

    பெண் கொடுக்க மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள நெம்மேலியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் பூவேஸ்குமார் (வயது 32).

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதைத்தொடர்ந்து அவர் அந்த பெண்ணின் தந்தையை சந்தித்து பெண் கேட்டார். அதனை அந்த பெண்ணின் தந்தை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார். இதில் மனமுடைந்த பூவேஸ்குமார் வி‌ஷம் குடித்து விட்டார்.

    அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×