search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korattur Lake"

    • கொரட்டூர் ஏரிக்கு 162 வகையான பறவைகள் வருகிறது.
    • கொரட்டூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சியில் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர் ஏரி சுமார் 900 ஏக்கரில் பரந்து விரிந்து இருந்தது. தற்போது இது ஆக்கிரமிப்புகளினால் 590 ஏக்கராக சுருங்கி காணப்படுகிறது.

    கொரட்டூர் ஏரிக்கு வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வருவது வழக்கம். தற்போது 12 வகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் பல்வேறு வகை வெளிமாநில பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் கொரட்டூர் ஏரி புதிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்குள்ள பறவைகைள கண்காணிப்பது புதிய பொழுதுபோக்காக பலருக்கு மாறி உள்ளது.

    கொரட்டூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சியில் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் ஏரிக்கு வரும் பறவைகளை கணக்கெடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி ஆசிரியர் ரவிசங்கர் தலைமையிலான குழுவினர் கொரட்டூர் ஏரியில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 47 வகையான பறவைகள் ஏரிக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரவிசங்கர் கூறும்போது, 'ஜனவரி மாதம் பறவைகளை பார்ப்பதற்கு ஏற்றது. நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஏரியில் பறவைகளை கண்காணித்து வருகிறேன். தற்போழுது இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்றார்.

    இது தொடர்பாக கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் செயலாளர் சேகரன் கூறும்போது, 'கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது. இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. ஏரிக்கு 162 வகையான பறவைகள் வருகிறது. சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பறவைகள் வரும்.

    இந்த பறவைகள் குறித்து நாங்கள் கணக்கெடுத்து ஆவணப்படுத்தி வருகிறோம். தற்போது கொரட்டூர் ஏரிியில் பறவைகள் கண்காணிப்பது பொதுமக்களின் புதிய பொழுதுபோக்காக மாறி வருகிறது. எனவே கொரட்டூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலை கழிவு நீரால் ஏரியின் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது.

    தற்போது வரை ஏரிக்கு 51 வகையான பறவைகள் வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் பறவைகள் அதிகம் உள்ளதை பார்க்க முடியும். காலை 6 மணி முதல் 8.30 மணி வரை பறவைகளை ரசிக்க ஏற்ற நேரம் ஆகும்' என்றார்.

    கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர்,எஸ்எஸ் நகர் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்குமின் இணைப்பு, ரேசன் கார்டு, சொத்துவரி, மெட்ரோ வாட்டர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பொதுப் பணிதுறை சார்பில் பகுதி சர்வே எண் 813 இல் உள்ள 589 குடும்பங்கள் கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பில் வருவதாகவும், எனவே அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினார்.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதற்கிடையே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவிந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை குடும்பத்துடன் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    ×