search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரட்டூர் ஏரியில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு - வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் முற்றுகை
    X

    கொரட்டூர் ஏரியில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு - வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் முற்றுகை

    கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர்,எஸ்எஸ் நகர் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்குமின் இணைப்பு, ரேசன் கார்டு, சொத்துவரி, மெட்ரோ வாட்டர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பொதுப் பணிதுறை சார்பில் பகுதி சர்வே எண் 813 இல் உள்ள 589 குடும்பங்கள் கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பில் வருவதாகவும், எனவே அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினார்.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதற்கிடையே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவிந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை குடும்பத்துடன் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    Next Story
    ×