search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kongu Vellalar Matric School"

    • 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • அ.கோ.சுதர்ஷிகா 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.

    அனுப்பர்பாளையம் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அ.கோ.சுதர்ஷிகா 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.

    மேலும் அந்த மாணவி கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி சுதர்ஷிகாவுக்கு பள்ளி தாளாளரும், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் பாராட்டினார்கள்.

    ×