search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kmch hospital"

    • 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    கோவை,

    புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவ மனையான கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள்,டாக்டர்கள், மருத்துவதுறை சார்ந்த வர்கள், செவிலி யர்கள், மாணவர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.மாரத்தான் கோவில்பா ளையம் கே.எம்.சி.எச் மருத்து வமனையில் தொடங்கி அவினாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் நிறைவுற்றது. இதில் கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசும்போது, கோவையில் கேஎம்சி.எச் சார்பாக முதல் மாரத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். புற்றுநோயை குணப்படுத்துதல் தொடர்பாக இம்முறை இந்த மாராத்தான் நடைபெறுகிறது என்றார்.மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    ×