என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed by train"

    • . இன்று காலை ரெயில் சென்று கொண்டிருந்தபோது பெண் மான் ஒன்று தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பரிதாபமாக இறந்தது.
    • இதுகுறித்து ஈரோடு வன காவலர் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு: 

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கும் காவேரி ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று காலை ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    இந்த பகுதியில் இரு புறமும் தென்னை, வாழை தோட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த பகுதியில் அவ்வப்போது மான்கள் நடமாட்டமும் இருந்து வந்துள்ளது.

    இன்று காலை ரெயில் சென்று கொண்டிருந்தபோது பெண் மான் ஒன்று தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.இதுகுறித்து ஈரோடு வன காவலர் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது.     

    ×