என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kilkothagiri"
- சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் பிரதானசாலை துண்டிப்பு
- 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் பெய்த கனமழை காரணமாக சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பிரதானசாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கரிக்கையூர், வக்கணமரம், மெட்டுக்கள், குடகூர், சாமகொடர் உள்பட 10 கிராமங்களுக்கு செல்லும் பஸ் சேவை தடைபட்டு உள்ளது. இதனால் அந்த கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்ககாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட பகுதிகளில் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நீலகிரி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், கீழ்கோத்திரி இளைஞர் அணி சிவனேசன் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்