search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keynote Address"

    • பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் இளந்துறை ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
    • ஒவ்வொரு கிளை நிர்வாகிகளிம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கி சிறப்புரையாற்றினார் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் படிவம் வழங்கும் நிகழ்ச்சி இளம்துறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு திருவெண்ணை நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளரும் பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவருமான இளந்துறை ராமலிங்கம் தலைமை தாங்கினார்.ஒன்றிய அவைத் தலைவர் பாபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் பாலச்சந்திர விநாயகம், ஒன்றிய இணைச் செயலாளர் பழனியம்மாள் சுப்பராயன், ஒன்றிய துணைச் செயலாளர் அனிதா சதீஷ் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பலராமன் அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ.வமான இரா. குமரகுரு கலந்துகொண்டு திருவெண்ணை நல்லூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிளை நிர்வாகிகளிம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கி சிறப்புரையாற்றினார் .

    இதில் ஒன்றிய துணைச் செயலாளர் ரகோத்தமன், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் கோதண்டபாணி,கார்த்திகேயன், மலர்விழி தனசேகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தேவேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி ,ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் மாயவன், கோவிந்தம்மாள் சக்கரவர்த்தி, சிறு மதுரை சங்கர் ,தலைமை கழக பேச்சாளர்அசலான், பெரிய செவலை ஏழுமலை மற்றும் பிற அணி மாவட்ட செயலாளர் ,ஒன்றிய செயலாளர் மகளிர் அணி பாசறை செயலாளர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்புரை ஆற்றுகிறார்.
    • முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றுகிறார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. பொன்விழா நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ரோட்டில் இன்று மாலை 5 மணி அளவில் தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை இணை செயலாளர் ஆர். காந்தி தலைமை தாங்குகிறார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் நன்றி உரை ஆற்றுகிறார்.

    இதில் முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான இரா. காமராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இதேபோல் தலைமை பேச்சாளர்கள் நள்ளாற்று நடராஜன், மணிமுரசு, ருத்ரா தேவி, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேகர், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மலைஅய்யன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் நாராயணி ஜவகர் சக்திவேல், மாவட்ட பாசறை செயலாளர் அலெக்ஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கதிரவன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சங்கர், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோரும் சிறப்புரையாற்றுகின்றனர்.

    இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், மாவட்ட துணை செயலாளர்கள் தவமணி மலையப்பன், பொன். முத்துவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை செந்தில், திருவோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் துரை மாணிக்கம், தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் மலை‌. முருகேசன், பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், முன்னாள் நகர செயலாளர் பஞ்சா பிகேசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் நாகராஜன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிங் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, கவிதா கலியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் உமாபதி, குடந்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல செயலாளர் திருநீலகண்டன், அதிராம்ப ட்டினம் பேரூர் செயலாளர் பிச்சை, வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், மதுக்கூர் பேரூர் செயலாளர் ஆனந்த், பேராவூரணி பேரூர் செயலாளர் நீலகண்டன், தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், யு.என்.கேசவன், காந்திமதி நவநீதகிருஷ்ணன், கலைவாணி சிவகுமார், தெட்சிணாமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் முருகேசன், கீழவாசல் பகுதி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    ×