search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala tourists"

    • வழக்கமாக செப்டம்பர் மாதம் கொடைக்கானலுக்கு ஆப் சீசன் காலமாகும். இந்த மாதத்தில் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள்.
    • இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறை என்பதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது. வழக்கமாக செப்டம்பர் மாதம் கொடைக்கானலுக்கு ஆப் சீசன் காலமாகும். இந்த மாதத்தில் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள்.

    ஆனால் இந்த வருடம் தொடர் மழை மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குறிப்பாக அடுக்கம் சாலையில் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டு அங்கு பாதை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் அந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை.

    பழனி-கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி சீரமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.

    குறிப்பாக கேரளமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்டதாலும், இதமான சூழல் நிலவுவதாலும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா இடங்களையும் கண்டு ரசித்தனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ேமலும் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ள ஓட்டல், விடுதி உரிமையாளர்களும், வாடகை டாக்சி டிரைவர்களும், வழிகாட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறை என்பதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானலில் இதமான சீதோசணம் நிலவி வருவதால் கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கஜா புயலுக்கு பின்னர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா இடங்கள் மற்றும் பேரிஜம் ஏரி பகுதியில் விழுந்த மரங்கள், மின் கம்பங்கள் அகற்றப்பட்டதால் அங்கு சென்று சுற்றி பார்க்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவு, அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது.

    மேலும் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இன்று காலை வெயில் அடித்து இதமான சீதோசணம் நிலவியது.

    மேலும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இன்று காலையில் இருந்தே வாகனங்கள் அதிக அளவில் வந்தது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    முக்கிய சுற்றுலா இடங்களான பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களை சுற்றிபார்த்து நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    புத்தாண்டு பிறப்பை யொட்டி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் தற்போது இருந்தே ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் பனிப்பொழிவு குறைந்து வெயில் அடிக்கத் தொடங்கியதால் ஓட்டல் உரிமையாளர்கள், டாக்சி டிரைவர்கள், வியாபாரிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ×