என் மலர்
நீங்கள் தேடியது "Kerala lakhs"
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா போலீஸ் அதிகாரி சித்த ரஞ்சன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.50 லட்சத்து 87 ஆயிரம் பணம் இருந்தது. அவை புத்தம் புதிய ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டு கட்டுகளாக இருந்தது.
அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அவர்கள் மலப்புரம் மாவட்டம் பொன்னானி அருகே உள்ள சந்தைக்குடியை சேர்ந்த சஞ்சையன் (30), மலப்புரம் சதிஷ் (31) என்பது தெரிய வந்தது.
கோவையில் இருந்து மலப்புரத்திற்கு பணத்தை கடத்தி சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.






