என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaval Forest"

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
    • துடியலூர், வடவள்ளி காவல் நிலையங்கள் நாளை முதல் கோவை மாநகர போலீசுடன் சேர்க்கப்பட உள்ளது.

    கோவை, -

    கோவை மாநகர பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும்விழா நடைபெற்றது. இதனை மாநகர போலீசாரும், சிறுதுளி அமைப்பும் ஒருங்கிணைந்து நடத்தியது.

    மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது சுமார் 750 மரக்கன்றுகள், மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பேசுகையில், காவல் வனத்தில் 750 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. இம்மரங்களை சிறுதுளி அமைப்பு பராமரிக்க உதவுகிறது.

    ஏற்கனவே 1500 மரங்கள் இவ்வளாகத்தில் உள்ளன. இவை சுற்றுபுற சூழலை மேம்படுத்த உதவும். துடியலூர், வடவள்ளி காவல் நிலையங்கள் நாளை முதல் கோவை மாநகர போலீசுடன் சேர்க்கப்பட உள்ளது.

    எனவே அந்த காவல் நிலைய சரகத்தில் நியமிக்கப்பட்டு உள்ள கூடுதல் போலீசார் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஒழுங்குபடுத்த முடியும், போக்குவரத்தையும் சீர்படுத்த இயலும்.

    மாநகரின் ஒரு பகுதியில் குற்றம் செய்து விட்டு, பிற இடத்திற்கு தப்பி செல்லும் சூழல் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த 2 காவல் நிலையங்களும் மாநகர போலீசுடன் இணைவதால், அதுபோன்ற சூழல் இனிமேல் ஏற்படாது.

    மாநகரப் பகுதிகளில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் சென்ற சுமார் 500 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வேகத்தை கண்டறியும் சென்சார் கருவிகளை மாநகரின் மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×