search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashi Vishwanath"

    • 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
    • நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.

    சுவாமிமலை:

    ஆடுதுறை மருத்துவ க்குடியில் விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர் கோயில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறையில் திருப்பணி செய்து வரும் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதனை முன்னிட்டு நாளை ( 11-ம் தேதி) மாலை 4 மணிக்கு கங்கை, யமுனா, கோதாவரி,சிந்து, நர்மதை, தலைக்காவிரி, சரஸ்வதி ஆகிய சப்த நதிகள் உள்ளிட்ட 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.

    13-ம் தேதி மாலை 4 மணிக்கு நதிகளின் புனித நீர் கலச பூஜையும், 18-ம் தேதி காலை 9 மணிக்கு வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்புடன், அலங்கார குதிரை, ஒட்டகம், செண்டை மேளம், மங்கள இசை முழங்க புனித நீர் எடுத்து வரும் ஊர்வலமும், தொடர்ந்துநான்கு கால யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாச ந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரம்மாசாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கசுவாமி தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், பேரூராதீனம் சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள், ராமகிருஷ்ண மடம் துறவியர்கள், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்துறவியர்கள் உள்ளிட்ட சைவ, வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட துறவியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கிராம நாட்டான்மைகள், செயல் அலுவலர்கிருஷ்ண குமார், பக்தர்கள் செய்து ள்ளனர்.

    ×