என் மலர்
நீங்கள் தேடியது "Kashi Vishwanath"
- 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
- நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.
சுவாமிமலை:
ஆடுதுறை மருத்துவ க்குடியில் விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர் கோயில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறையில் திருப்பணி செய்து வரும் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை ( 11-ம் தேதி) மாலை 4 மணிக்கு கங்கை, யமுனா, கோதாவரி,சிந்து, நர்மதை, தலைக்காவிரி, சரஸ்வதி ஆகிய சப்த நதிகள் உள்ளிட்ட 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
13-ம் தேதி மாலை 4 மணிக்கு நதிகளின் புனித நீர் கலச பூஜையும், 18-ம் தேதி காலை 9 மணிக்கு வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்புடன், அலங்கார குதிரை, ஒட்டகம், செண்டை மேளம், மங்கள இசை முழங்க புனித நீர் எடுத்து வரும் ஊர்வலமும், தொடர்ந்துநான்கு கால யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாச ந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரம்மாசாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கசுவாமி தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், பேரூராதீனம் சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள், ராமகிருஷ்ண மடம் துறவியர்கள், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்துறவியர்கள் உள்ளிட்ட சைவ, வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட துறவியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கிராம நாட்டான்மைகள், செயல் அலுவலர்கிருஷ்ண குமார், பக்தர்கள் செய்து ள்ளனர்.
- மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டியுடன் இணைந்து 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்ல்வெத் விளையாட்டு, 2023-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த இணை உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதித்தது. கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருக்கும் சாத்விக் சாய்ராஜ் இன்னும் அந்த விருதை பெறவில்லை. டெல்லியில் நடைபெறும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள சாத்விக் கேல்ரத்னா விருதை நேற்று பெற்றுக்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது தந்தையும், முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமான காசி விஸ்வநாதன் (வயது 65) தனது மனைவி ரங்கமணி மற்றும் குடும்ப நண்பருடன் டெல்லி செல்வதற்காக ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் இருந்து ராஜமுந்திரி விமான நிலையத்திற்கு நேற்று காலை காரில் சென்றார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தகவல் அறிந்த சாத்விக் விமானம் மூலம் மாலை சொந்த ஊர் திரும்பினார். சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.






