என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karupa Nathi Dam"
- நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது.
- மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதிய நேரத்திற்கு பின்னர் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. பேட்டை, அபிஷேகப்பட்டி, சீதபற்பநல்லூர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பயங்கர இடி-மின்னலும் இடித்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை, பாளை பகுதியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் சுமார் 1 மணிநேரம் மழை பெய்தது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு நேற்று ஒரே நாளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்யும் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்