search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthika Deepatri festival"

    • மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.
    • இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் ஒண்டி மலையடிவாரத்தில் சன்னாசியப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சன்னாசியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு ஒண்டி மலை உச்சியில் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப மகா கார்த்திகை தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு கருட பகவான் வட்டமிட்டது.இறைவன் கருட பகவான் வடிவில் வந்துள்ளதாக எண்ணி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் உலக மக்கள் நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபத்தை கண்டமனூர், வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.

    தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலாயுதபுரம் கிராம பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் கோலாகல மாக தொடங்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து 10 நாட் கள் நடைபெறும் தீபத்தி ருவிழா உற்சவத்தின் 7-வது நாளான 23-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவாக, 26-ந் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீப ஏற்றப்படுகிறது.

    மேலும், தீபத்திருவி ழாவின் தொடக்கமாக தொடர்ந்து 3 நாட் கள் காவல் எல்லை தெய்வ வழிபாடு நடத்தப்படுவது வழக்கம் அதன் படி, நாளை துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, 15-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 16-ந் தேதி விநாய கர் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங் கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, முன்கூட்டியே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், தீபத்தி ருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன் னேற்பாடுகளை சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநி துறை செயலாளர் க.மணிவாசன் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, கோவில் உள் பிரகாரங்கள், வெளிப்பிரகா ரங்கள். தேரோடும் மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வை யிட்டார்.

    விழாவுக்கு கூடுதலான பக்தர் கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், அதற்கான விரிவான முன்னேற்பாடு களை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக் குவரத்து உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்திட வேண் டும் என உத்தரவிட்டார்.

    மேலும், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது பக்தர்களை அனுமதிக்க ஏற்க னவே கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமு றையை பின்பற்றவும், 3ம் பிரகாரத்தில் உள்ள இட வசதி அடிப்படையில் எண்ணிக்கையை கணக்கிட்டு பக்தர்களை அனுமதிக்க வும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது, கலெக் டர் பா.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலை வர் ஜீவானந்தம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

    • கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    • சாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைத்து புதியதாக வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றா கும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகா தீப ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

    விழாவின் 7-ம் நாள் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடை பெறும். அன்று காலையில் தொடங்கி நள்ளிரவு வரை விநா யகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ் வர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேர்கள் மாட வீதியில் அடுத்தடுத்து பவனி வரும். இந்த நிலையில் கோவிலில் தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    விழா நாட்களில் சாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைத்து புதியதாக வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றது.

    தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் தேர்கள் பழுது நீக்கி சீரமைக் கும்பணி தொடங்கி விறு, விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்காகதேரடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு தேர்களின் பாதுகாப்பிற்காக மூடப்பட்டு இருந்த இரும்பு தகடுகள் நேற்று அகற்றப்பட்டன. தொடர்ந்து தேர்களின் சக்கரங்கள், அச்சு போன்ற பாகங்கள் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்யப் பட்டது. உறுதி குறைந்து உள்ள பாகங்களை மாற்றவும், சீர மைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தேர்கள் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் பொதுப்பணித்துறை (கட்டுமானம்) அதிகாரிகள் தேர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மை குறித்து சான்று அளிக்க உள்ளனர்.

    ×