search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்
    X

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவிலில் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் ஆய்வு செய்தார். கலெக்டர் பா.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உட்பட பலர் உள்ளனர்.

    தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

    • வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் கோலாகல மாக தொடங்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து 10 நாட் கள் நடைபெறும் தீபத்தி ருவிழா உற்சவத்தின் 7-வது நாளான 23-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவாக, 26-ந் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீப ஏற்றப்படுகிறது.

    மேலும், தீபத்திருவி ழாவின் தொடக்கமாக தொடர்ந்து 3 நாட் கள் காவல் எல்லை தெய்வ வழிபாடு நடத்தப்படுவது வழக்கம் அதன் படி, நாளை துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, 15-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 16-ந் தேதி விநாய கர் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங் கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, முன்கூட்டியே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், தீபத்தி ருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன் னேற்பாடுகளை சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநி துறை செயலாளர் க.மணிவாசன் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, கோவில் உள் பிரகாரங்கள், வெளிப்பிரகா ரங்கள். தேரோடும் மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வை யிட்டார்.

    விழாவுக்கு கூடுதலான பக்தர் கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், அதற்கான விரிவான முன்னேற்பாடு களை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக் குவரத்து உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்திட வேண் டும் என உத்தரவிட்டார்.

    மேலும், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது பக்தர்களை அனுமதிக்க ஏற்க னவே கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமு றையை பின்பற்றவும், 3ம் பிரகாரத்தில் உள்ள இட வசதி அடிப்படையில் எண்ணிக்கையை கணக்கிட்டு பக்தர்களை அனுமதிக்க வும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது, கலெக் டர் பா.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலை வர் ஜீவானந்தம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×