search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanyakumari youth arrest"

    கேரளாவை சேர்ந்த இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய கன்னியாகுமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் லைஜுன் (வயது 27).

    இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள செங்கனூர் பகுதிக்கு சென்று கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செல்போன் நம்பர் கிடைத்தது.

    இதன்மூலம் அவர் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி பழகி வந்தார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது வாட்ஸ் அப்பில் வைத்திருந்த போட்டோவை எடுத்து அதை மார்பிங் மூலம் லைஜுன் ஆபாச படமாக மாற்றி உள்ளார்.

    பிறகு அந்த போட்டோவை அந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் அனுப்பி தனக்கு பணம் தராவிட்டால் அதை மற்றவர்களுக்கு பரப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறி அழுதார்.

    மேலும் வாலிபர் மிரட்டல் பற்றி செங்கனூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து லைஜுன் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை சோதனை செய்தபோது அதில் ஏராளமான தமிழ் பெண்கள், கேரள பெண்களின் மார்பிங் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அவர் வேறு பெண்களையும் இதுபோல மிரட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×