search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kandhamal"

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால் தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Maoists
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பாராளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. 

    புல்பானி சட்டசபை தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பணிபுரிய வந்த சஞ்சுக்தா திகால் என்ற பெண் அதிகாரியை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொலை செய்தனர்.

    தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரியை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Maoists
    ஒடிசாவின் கந்தமால், பலாங்கிர் மாவட்டங்களில் பாதுகாப்பு படை நடத்திய நடந்த என்கவுண்டரில் 6 நக்சல்கள் சுட்டுக் கொன்றனர். #NaxalEncounter
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 



    இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

    இதேபோல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள கோலங்கி கிராமத்தின் அருகே சுடுகும்பா காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு பெண்கள் உள்பட 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NaxalEncounter
    ×