search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchipuram rain"

    காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையாக கொட்டி தீர்த்தது. கோடை வெப்பத்தில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காஞ்சிபுரத்தில் வழக்கத்தினை விட அதிக வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையாக கொட்டி தீர்த்தது.

    நகரின் சில பகுதிகளில் சூறைக்காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சாலைகளில் சில இடங்களில் மரங்கள் விழுந்ததால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர், நகராட்சி ஊழியர்கள் மழையினை பொருட்படுத்தாமல் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர். மின் தடையும் ஏற்பட்டது. கோடை வெப்பத்தில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சூறைகாற்று காரணமாக காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தன.

    ஊத்துக்கோட்டையில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை ஒரு மணி வரை நீடித்தது.

    இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.

    ஊத்துக்கோட்டை, சென்னேரி, கரடிபுத்தூர், சீதஞ்சேரி, அம்மம்பாக்கம், நசராரெட்டி கண்டிகை, புது குப்பம், ஆம்பாக்கம், பேரடம், சிறுவனம்புதூர், மதனம்பேடு, நெல்லிமித்திகண்டிகை, காரணி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மாமரங்களை பயிரிட்டு உள்ளனர்.

    தற்போது மாங்காய் அறுவடை நேரம். இந்த நிலையில் சூறாவளி காற்று வீசியதால் டன் கணக்கில் மாங்காய்கள் கீழே விழுந்து

    கஜா புயல் காரணமாக காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    காஞ்சீபுரம்:

    ‘கஜா’ புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது.

    இதேபோல் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.

    காஞ்சீபுரத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததாலும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    மேட்டுத்தெரு, விளக்கடி கோவில் தெரு பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதி அடைந்தனர்.

    பஸ் நிலையம், கங்கை கொண்டான் மண்டபம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து காணப்படுகிறது.இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

    மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. திருவள்ளூரில் அதிகபட்சமாக 39 மி.மீட்டர் மழை பதிவானது.

    இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஆர்.கே.பேட்டை - 5

    பொன்னேரி அரசு ஆஸ்பத் திரி முன்பு பாய்ந்த மழைநீர் வெளியேறாமல் மருத்துவமனை வளாகத்திலேயே தேங்கி நின்றது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

    புறநோயாளிகள் மழை நீருக்குள் நின்று கொண்டு மருந்து சீட்டு வாங்கும் நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்கு நோயாளியை கொண்டு செல்ல முடியாத நிலையும் உருவானது. சில நோயாளிகள் தண்ணீருக்குள் வழுக்கி விழுந்தனர்.

    இதுகுறித்து நோயாளிகள் கூறும் போது, ‘‘கடந்த மாதம் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி நின்றது மருத்துவ மனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் சீர் செய்யபடவில்லை. நேற்று பெய்த மழையில் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாத படி தண்ணீர் தேங்கிவிட்டது. இதனால் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    ஆஸ்பத்திரி முன்பு மழை நீர் தேங்காதபடி பேருராட்சி மற்றும் சுகாதார துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

    ×