என் மலர்
நீங்கள் தேடியது "Kalalkadu"
- குலசேகரன் பால் எடுத்து கொண்டு களக்காட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த குலசேகரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் குலசேகரன் (வயது47). பால் வியாபாரி. நேற்று இவர் கேசவநேரியில் இருந்து பால் எடுத்து கொண்டு களக்காட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அவர் கருவேலங்குளம் அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, மொபட் மீது மோதியது. இதில் குலசேகரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோவை ஓட்டி வந்த கீழக்கருவேலங்குளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






