என் மலர்
நீங்கள் தேடியது "Jolarpettai robbery"
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் சென்னை காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து விட்டு சூட்கேசை வீசி சென்றுள்ளனர்.
ஜோலார்பேட்டை:
சென்னையை சேர்ந்தவர் பெரியசாமி. காண்டிராக்டரான இவர் நேற்று ஈரோடு சென்றார். அங்குள்ள தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் பணத்தை வாங்கினார்.
அதனை ஒரு சூட்கேசில் எடுத்து கொண்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12.30 மணிக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரியசாமி தூக்க கலக்கத்தில் இருந்தார்.
இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் பெரியசாமி வைத்திருந்த பணப்பெட்டியை யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்தனர். திடீரென கண் விழித்த பெரியசாமி பணப்பெட்டி காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி போன் மூலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் சென்னை சென்ட்ரல் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் பெரியசாமியின் சூட்கேஸ் வீசப்பட்டு கிடந்தது. மர்ம கும்பல் பணத்தை எடுத்துவிட்டு காலி சூட்கேசை வீசி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
பெரியசாமி வந்த அதே ரெயில் பெட்டியில் தான் கொள்ளையர்கள் பயணிகள் போல பயணம் செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் ரெயில் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரங்களில் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் பெரியசாமி. காண்டிராக்டரான இவர் நேற்று ஈரோடு சென்றார். அங்குள்ள தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் பணத்தை வாங்கினார்.
அதனை ஒரு சூட்கேசில் எடுத்து கொண்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12.30 மணிக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரியசாமி தூக்க கலக்கத்தில் இருந்தார்.
இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் பெரியசாமி வைத்திருந்த பணப்பெட்டியை யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்தனர். திடீரென கண் விழித்த பெரியசாமி பணப்பெட்டி காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி போன் மூலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் சென்னை சென்ட்ரல் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் பெரியசாமியின் சூட்கேஸ் வீசப்பட்டு கிடந்தது. மர்ம கும்பல் பணத்தை எடுத்துவிட்டு காலி சூட்கேசை வீசி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
பெரியசாமி வந்த அதே ரெயில் பெட்டியில் தான் கொள்ளையர்கள் பயணிகள் போல பயணம் செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் ரெயில் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரங்களில் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






