என் மலர்
நீங்கள் தேடியது "Jenaka Narayana Perumal"
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
- நகரில் உள்ள வீதிகளில் பக்தி பாடல் பாடி ஆடி வந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவி லில் திருக்கல்யாணம் நடை பெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மேளதாளத்து டன் பெண்கள் சீர்வரிசை எடுத்து 4 ரதவீதி வலம் வந்து கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தை அடைந்தனர். அங்கு யாகவேள்வியுடன் ஸ்ரீபதி என்ற சீதாராமன்பட்டர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்ச வம் நடைபெற்றது. உபயதா ரர் தங்கம் ஆசிரியை குடும் பத்தினர் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசா தம் வழங்கினர்.
இதில் செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர் முரளிதரன் உட்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கருடாழ் வார் வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், அர்ச் சனை, பூஜைகள் நடந்தது.
இதே போல் குருவித்துறை சித்தர் ரத வல்லப பெருமாள் கோவிலி லும், சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவி லில் உள்ள மகா விஷ்ணுக்கு புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.
சோழவந் தான் ரவுத்து நாயக்கர் தெருவில் உள்ள கொண்டல் ராவத் நவநீத கிருஷ்ணா நந்த பஜனை குழுவினர் பூங்காவனம் தலைமையில் நகரில் உள்ள வீதிகளில் பக்தி பாடல் பாடி ஆடி வந்தனர்.






