search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JCP Machinery"

    • வடிவாய்க்கால் கரைகளை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றி கரைகளை பலப்படுத்தினர்.
    • கதவணைகளை இயந்திரத்தைக் கொண்டு உடைத்து ஆழப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை காரணமாக சீர்காழி வட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சீர்காழியை அடுத்த எடமணல், வேட்டங்குடி, ஆலங்காடு, இருவக்கொ ல்லை, திருமுல்லைவாசல், வழுதலைக்குடி, வடகால் உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

    இதனை அடுத்து மழை வெள்ளத்தால் மூழ்கிய பயிர்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் லலிதா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்பொழுது மழைநீரை வேகமாக அகற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொ ள்ள பொது ப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.இந்நிலையில்சீர்காழி அருகே உள்ள பழவஞ்சியாறு, முடவன்ஆறு உள்ளிட்ட வடிவாய்க்கால் கரைகளை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றி கரைகளை பலப்படுத்தினர். மேலும் மண் மூட்டைகள் வைத்து பலப்படுத்தியும் இந்த வடிகால் ஆறு கடலில் சென்று கலப்பதற்கு முன்பு கட்டப்பட்டுள்ள கதவணைகளை (ஏர் பிரேக்கர்) இயந்திரத்தைக் கொண்டு உடைத்து ஆழப்படுத்தும் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதிக ளில் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் வேகமாக கடலில் சென்று வடிய தொடங்கியுள்ளதாக பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ஒரு மணி நேரத்தில் ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டது.

    அவனியாபுரம்

    மதுரை அவனி யாபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக முக்கிய சாலையாக இருக்கும் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கருத்தான் சேர்வை தெருவில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவனியாபுரத்தில் இருந்து பெருங்குடி, விமான நிலையம், காரியாபட்டி செல்லும் அரசு பஸ்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது.

    தகவலறிந்த அவனியா புரம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பாண்டி கவுன்சிலர்கள் கருப்புசாமி, முத்துலட்சுமி அய்யனார், உதவி பொறியாளர் முனீர் அகமது, நிர்வாக உதவி பொறியாளர் மைலநாதன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அதன் பிறகு மறியல் கைவிடப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்தில் ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டது.

    ×