search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalithaa death inquiry"

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் நிதிஷ்நாயக், கில்ஞானி இன்று ஆஜரானார்கள். #Arumugasamycommission #jayalalithaadeath #AIIMS
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், கார் டிரைவர்கள், அரசு ஆலோசகர், அரசு செயலாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், அரசு டாக்டர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

    இவர்கள் அளித்த வாக்கு மூலங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்ட டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேருக்கு விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. வருகிற 23, 24-ந் தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    இதை ஏற்று எய்ம்ஸ் டாக்டர்கள் நிதிஷ்நாயக், கில்ஞானி இன்று காலை சென்னை வந்தனர். எழிலகத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜரானார்கள்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர்கள் விளக்கமாக விவரித்தனர். இவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. #Arumugasamycommission #jayalalithaadeath #AIIMS
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்தை விசாரிக்க முடிவு செய்துள்ளது- #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினார்கள்.

    இதையடுத்து அதுபற்றி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது உடன் இருந்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை அந்த ஆணையம் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


    இதற்கிடையே சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஆணையத்தில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தெரிவித்தவர்களிடம் அவர் குறுக்கு விசாரணையும் நடத்தினார்.

    இந்த நிலையில், இந்த விசாரணைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அழைக்க வேண்டும் என்று வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஓ.பி.எஸ். நிறைய குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் வலியுறுத்தி கூறி இருப்பதால் அவரை அழைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும் என்று சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

    அவரது கோரிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்றுக் கொண்டார். எனவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விரைவில் விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அளிக்கும் வாக்குமூலம் இந்த விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சரி, ஆஜராகி தகவல்கள் தெரிவிக்க தயார் என்று தெரிவித்தனர். #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 6 பேர் இன்று நேரில் ஆஜர் ஆனார்கள். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் அரசு செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் சிலரை ஆணையத்துக்கு மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டனர்.


    ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.

    இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்-யார் பார்த்தார்கள். அங்கு யார் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்தது என்பது உள்பட பல்வேறு தகவல்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    ×