என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamapandhi petition"

    • 10 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகளை சப்-கலெக்டர் வழங்கினார்.
    • கழிப்பிடம் கட்டித் தரப்படும் என சப்-கலெக்டர் தெரிவித்தார்.

     அரவேனு : கோத்தகிரி அருகே அரவேனு தும்பூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் இந்த ஆண்டு 75-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று தங்கள் பெற்றோருடன் கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய குழந்தைகள் பயின்று வரும் பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிப்பிடம் அமைந்துள்ளது. இந்த கழிப்பிடம் கிராமப்பகுதியின் அருகே உள்ளதால் அங்கு கிராம மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் வனவிலங்குகளான கரடி, காட்டு மாடு, பன்றி போன்ற வனவிலங்குகள் பகல் நேரங்களிலேயே உலா வருவதால் குழந்தைகள் பயன்படுத்தமுடியாத சூழல் ஏற்ப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி கழிப்பிட சுவற்றில் விரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் மழைக்காலங்களில் பயத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் அட்டைப்பூச்சி அதிகமாக காணப்படுவதால் குழந்தைகள் காலில் கடித்து ரத்தம் வடிந்து வருகிறது.

    இதுசம்பந்தமாக ஒரு நல்ல தீர்வு கிடைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, நீலகிரி மாவட்ட கலெக்டர், மக்களை தேடி மக்களின் அரசு திட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர், ஜக்கனாரை ஊராட்சி மன்றம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளியில் தற்காலிகமாக மொபைல் கழிப்பிடம் வைக்கப்படும், விரைவில் அப்பகுதியை ஆய்வு செய்து நிரந்தர கழிப்பிடம் கட்டித் தரப்படும் என சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தெரி வித்தார்.

    ஜமாபந்தியில் கீழ் கோத்தகிரி கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 22 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 10 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகளை சப்-கலெக்டர் வழங்கினார். 

    ×