search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamabandhi closing ceremony"

    • ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 138 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்பெல்லாம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும்போது அதிகமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கிட வருவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது.

    ஏனென்றால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான மக்களாட்சியில் கடந்த 2 வருடங்களில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது.

    மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்காமல் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருகின்றார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

    உங்களின் கோரிக்கை மனு நியாயமானதாகவும், உண்மைத் தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். அதற்கு யாருடைய தயவும் தேவையில்லை.

    கடந்த ஒரு வாரம் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் 205 மனுக்கள் வரப்பெற்றது.

    இதில் 138 மனுக்கள் விசாரனையின் அடிப்படையில் ஏற்கப்பட்டது. 38 மனுக்கள் பரிசீலனைக்காக நிலுவையில் வைக்கப்ப ப்பட்டுள்ளது. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அரசைத் தேடி மக்கள் சென்ற நிலைமை மாறி தற்பொழுது மக்களைத் தேடிவந்து குறைகளை கேட்டறிந்து நலத்திட்டங்களை அரசுத வழங்கி வருகிறது.

    மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத், உதவி கலெக்டர் வினோத்குமார், வாலாஜா நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, தாசில்தார்கள் நடராஜன், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.46 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • 220 மனுக்களுக்கு உடனடி தீர்வு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

    ஆரணி சப்-கலெக்டர் தனலட்சமி தலைமை தாங்கினார். தாசில்தார் மஞ்சுளா முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் புஷ்பா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமசந்திரன், தி.மு.க. நகர செயளர் ஏ.சி.மணி, ஓன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் பெறப்பட்ட மொத்தம் 987 மனுக்களில், 220 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படடது.

    மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளன.

    இதில் ரூ.45 லட்சத்து 92 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன், ஆரணி நகர செயலாளர் ஏ.சி.மணி, ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஓன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.

    ×