search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jailer job"

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜெயிலர் பணிக்கான இணையவழித் தேர்வு நாளை (திங்கட்கிழமை) காலை மற்றும் மாலையில் நடக்கிறது.
    • நெல்லை மாவட்டத்தில் 1,500 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இதற்காக நெல்லை அருகே உள்ள மேலதிடியூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜெயிலர் பணிக்கான இணையவழித் தேர்வு நாளை (திங்கட்கிழமை) காலை மற்றும் மாலையில் நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 1,500 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இதற்காக நெல்லை அருகே உள்ள மேலதிடியூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்வின் போது தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும், கூடுதலாக பஸ்கள் இயக்கவும், போதிய போலீஸ் பாதுகாப்பு போடவும், மருத்துவ வசதி செய்து கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது. இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    ×