search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto-Jeo"

    • ஈரோட்டில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் 3 கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    ஈரோடு:

    ஈரோட்டில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பி.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணை ப்பா ளர்கள் விஜயமனோகரன், வீராகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு பேசியதாவது:-

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

    7-வது ஊதியக்குழு, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் 3 கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    முன்ன தாக நம் கோரிக்கை நிறை வேற்றாவிட்டால் வரும் 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்பார்கள்.மேலும் நமது கோரிக்கை மனுவை தமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏ.க்க ளிடமும் வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×