என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ISO"
- ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை:
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எனது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ள முதல் எம்.எல்.ஏ. நான்தான். ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
2011-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்தது.
இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேச தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சாதனையை சபாநாயகர் அப்பாவுவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடபழனி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்த்ரு ஆய்வாளராக பொறுப்பேற்ற பின்னர் காவல் நிலையத்தை முறைப்படுத்தினார்.
போலீஸ் நிலைய வளாகத்தையும், போலீஸ் நிலையத்தையும் சுத்தமாக பராமரித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டன.
போலீஸ் நிலைய சுவர்களில் சிந்தனையை தூண்டும் வாசகங்கள் போட்டோ வடிவில் உருவாக்கப்பட்டு பொறுத்தப்பட்டன. போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டு, புகார் கொடுக்க வருபவர்கள் கனிவுடன் வரவேற்கப்படுகின்றனர். போலீஸ் நிலையத்தினுள் மெல்லிய இசை ஒலிக்கிறது.
பார்வையாளர்கள் அமரும் அறையில் மோசடிப் பேர் வழிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது பற்றிய வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு கவரும் விதத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்ன? என்பது பற்றிய வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
மகளிர் போலீஸ் நிலைய பகுதியில் புகார் கொடுக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. முதல் மாடியில் காவலர்கள் ஓய்வு அறை அருகே உடற்பயிற்சி கூடமும் உள்ளது. இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உள்ள வடபழனி போலீஸ் நிலையம் எழில் மிகு தோற்றத்துடன் காட்சி அளிப்பதை அங்கு செல்பவர்கள் பார்த்து வியக்கின்றனர்.
இப்படி மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்து செயல் பட்டமைக்காக வடபழனி போலீஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சந்த்ருவை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்