search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Isis claims"

    ஆப்கானிஸ்தானில் சீக்கியர், இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. #Afghanistan #SikhsHindus
    காபூல்:

    முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் சீக்கியர் மற்றும் இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினமும் இவர்கள் மிகப்பெரும் தாக்குதலுக்கு இலக்காகினர்.

    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை சந்திப்பதற்காக ஜலாலாபாத்தில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.



    இதில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர் மற்றும் இந்துக்கள் ஆவர். அங்கு சீக்கிய குழுக்களின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வந்த அவதார் சிங் கல்சாவும் இதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இது தொடர்பாக அந்த இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது.  #Afghanistan #SikhsHindus #Tamilnews 
    ×