search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "introduction ceremony"

    • பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தனர்.
    • மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண வர்கள் அறிமுக விழா நடை பெற்றது.

    இதில் ஸ்காட் கல்வி நிறுவனர் கிளிட்டஸ் பாபு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ஸ்காட் குழும தாளாளர் பிரிய தர்ஷினி அருண் பாபு, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    கல்லூரி முதல்வர் வேல் முருகன் வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பேசுகையில், கல்லூரியில் பயிலும்போதே அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்ற நிகழ்வினையும், கல்லூரி நிர்வாகத்தின் சிறந்த கல்வி மற்றும் பேராசிரியர்கள் அளிக்கும் திறன் பயிற்சியை பற்றி எடுத்துரைத்தனர். அடுத்ததாக கல்லூரியின் ஆய்வகங்கள் மூலம் மாண வர்களுக்கு செயல் திறன் அளிக்கப்பட்ட அம்சங்களை யும் அவர்கள் எடுத்து கூறி னர்.

    பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர், இங்கு மாணவர்க ளுக்கு பேராசிரி யர்கள் செயல்முறை பயிற்சியை அளிக்கிறார்கள். 4 ஆண்டு களில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.வேலைவாய்ப்பு துறை இயக்குநர் முகமது சாதிக் கூறுகையில், எங்களது மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவ னங்களில் அளிக்கப்படும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக மாறுவ தற்கும், வெளிநாடுகளில் உயர்கல்வி கற்ப தற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

    நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், 'எங்களது கல்வி நிறுவனத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் சிறந்த கல்வி, நவீன ஆய்வகங்கள் மூலம் நீங்கள் சாதிப்பதற்கு பேராசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். மாணவர்கள் திறன் வளர்ச்சியை கற்பதன் மூலம் உயர்ந்த நிலையை அடையமுடியும். அதிக நேரம், கடினமாக உழைத் தால் தான் அதிக சம்பளம் பெற முடியும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது என்றார்.

    முடிவில் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் பிரிஸ்கா நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபால ராயன், திறன் பயிற்சி இயக்குநர் பாலாஜி, கல்விசார் பேராசிரியர் எல்.ஆர்.பிரியா, அப்ளைட் லேப் பொறுப்பாளர் லட்சுமி நாரா யணன் மற்றும் அனைத்து துறை பேராசிரி யர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேபிரியல் செய்திருந்தார்.

    ×