search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspection of Food Safety Officers"

    • சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் அந்தியூர் பேரூராட்சி இணைந்து அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    அந்தியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் உணவகங்களில் கலர் பொடி, அர்ச்சனா பவுடர், பழைய இறைச்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்தனர். அந்தியூரில் 15 உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பழைய சமைத்த உணவு 5 கிலோ, பழைய மீன் 2 கிலோ, கலர் பவுடர், பழைய புரோட்டா உள்ளிட்டவைகளை கைப்பற்றி அளிக்கப்பட்டது.

    மேலும் உணவின் தரம் பற்றி புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு கடைக்கும் ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • சத்யா நகரில் உள்ள தனியார் பிரியாணி ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியதாக எழுந்தது
    • இதில் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திண்டுக்கல் நகருக்கு இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க வருகின்றனர். மேலும் ஓட்டல்களிலும் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை பயன்படுத்தி பல்வேறு ஓட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகள் தயார்படுத்தி வருகின்றனர்.

    இதில் சிலர் தரமற்ற இறைச்சிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக சென்னை மற்றும் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அஞ்சலி ரவுண்டானா அருகே சத்யா நகரில் உள்ள தனியார் பிரியாணி ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    கடையின் உணவு சமைக்கும் இடத்தில் பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள், இறைச்சிகளை வைத்திருக்கும் முறை, ரசாயன வண்ணங்கள் ஏதும் சேர்க்கப்படுகிறதா, காலாவதியான உணவு பொருட்கள் உள்ளதா என தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    இதில் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் நகரின் பல்வேறு ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை மட்டும் கொடுக்க வேண்டும். தரமற்ற பொருட்கள் உணவு தயாரிக்க பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

    நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் உணவு விலை பட்டியல் வைப்பது இல்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு தனிப்பிரிவு உள்ளது. அந்த அலுவலர்கள் மூலம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×