search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indirect election"

    • மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
    • 5-வது முறையாக நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

    கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். துணை தலைவராக 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தானேஷ் (எ) முத்துக் குமார் இருந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்தார்,

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் 12 வார்டு கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் தி.மு.க.வின் பலம் 4 ஆக உயர்ந்தது. பின்னர் அ.தி.மு.க. 2 கவுன்சிலர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. தலா 6 கவுன்சிலர்கள் வீதம் சமபலம் பெற்றது.

    இதைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கு 22.10.2021 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை தேர்தல் அலுவலர் ஒத்தி வைத்தார். அதன்பின்னர் 3 முறை துணைத்தலைவர் தேர்தல்அறிவிப்பு வெளியானது. ஆனால் போதுமான கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் 5-வது முறையாக ஏற்கனவே அறிவித்தபடி தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் தலைமையில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

    தேர்தல் தொடங்குவதற்கு 10 நிமிடம் முன் ( 2.20 மணிக்கு) மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரின் கடிதம் அடிப் படையில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்ற அறிக்கை அறையின் வாசலில் ஒட்டப்பட்டது.

    இது குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் கூறியதாவது, இந்த இடைவெளியில் ஒரு கவுன்சிலர் யாவது தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்ற நினைக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். தேர்தலை ஒத்தி வைக்க காவல்துறை துணை போகிறது. அ.தி.மு.க. கவுன்சிலர் மீதும் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். யாரும் கட்சி மாற மாட்டார்கள். நியாயமாக தேர்தல் நடத்துங்கள் யார் வெற்றி பெற்றாலும் ஏற்கிறோம். தேர்தலை நடத்தாமல் தள்ளி வைப்பது எவ்வகையில் நியாயம் இவ்வாறு அவர் கூறினார்

    • கடம்பூர் பேரூராட்சி 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஷ்வரி, சிவகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
    • மொத்தம் உள்ள 12 வார்டில் தி.மு.க. 6 இடங்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி 12 வார்டுகளை கொண்டது.

    கடம்பூர் பேரூராட்சி

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

    கடம்பூர் பேரூராட்சி 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஷ்வரி, சிவகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மற்ற 9 வார்டுகளிலும் போட்டி இருந்ததால் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. அதில் ஏற்கனவே மனுதாக்கல் செய்த வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

    தேர்தல்

    அதன்படி 1, 2 மற்றும் 11-- வது வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தவிர மற்ற 9 வார்டுகளுக்கும் கடந்த 29-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் கனகமணி (3-வது வார்டு) , தாளபுஷ்பம் (4), தமிழரசி (5), சரஸ்வதி (6), மாரீஸ்வரி (7), செல்லத்துரை (8), ஜெயராஜ் (9), ரெங்கசாமி (10), முத்துமாரி (12) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    மொத்தம் உள்ள 12 வார்டில் தி.மு.க. 6 இடங்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.

    பதவியேற்பு

    இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

    மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அபுல்காசிம் வெற்றி பெற்ற 12 உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மறைமுக தேர்தல்

    நிகழ்ச்சியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், கடம்பூர் நகர செயலாளர் பாலகுமார், அரசு வக்கீல் ராமச்சந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஸ்வநாதராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கடம்பூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் கடம்பூர் பேரூராட்சி அலுவலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.



    ×