search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india communist demonstration"

    மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்வதை நிறுத்தக்கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு சார்பில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர செயலாளர் ஞானசேகர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.அழகு முத்துபாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

    நகர செயலாளர் சரோஜா, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், பிச்சை, அம்பிகாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் குணேஷ்வரி முன்னிலை வகித்தார்.

    இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உட்பட 11 பேருக்கு அஞ்சலி செலுத்தியும், மத்திய- மாநில அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அப்துல் காதர், மாவட்ட தலைவர் அப்பாஸ், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு ஒன்றிய குழு உறுப்பினர் மணி, கொம்பையா, ஞானமுத்து, சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×