search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் குணேஷ்வரி முன்னிலை வகித்தார்.

    இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உட்பட 11 பேருக்கு அஞ்சலி செலுத்தியும், மத்திய- மாநில அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அப்துல் காதர், மாவட்ட தலைவர் அப்பாஸ், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு ஒன்றிய குழு உறுப்பினர் மணி, கொம்பையா, ஞானமுத்து, சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×