என் மலர்
நீங்கள் தேடியது "increasing corona"
- கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாயின.
- அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பின்பு படிப்படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
சேலம்:
3 ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. மார்ச் மாதத்தில் இருந்து பாதிப்பு அதிகமாகி 2020-21-ம் ஆண்டுகளில் உச்சத்தை தொட்டது. கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாயின. அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பின்பு படிப்படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 3-ந்தேதி ஒருவருக்கு கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் 4-ந்தேதி 2 பேருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள். கொரோனா பரவல் அதிகரிப்பால் சேலத்தில் சுகாதாரத்துறை யினர் மற்ரும் மருத்து வத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சேலத்தில் தேதி வாரியாக கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு:-
மார்ச் 3-ந்தேதி ஒருவர், 4-ந்தேதி 2 பேர், 5-ந்தேதி ஒருவர், 6-ந்தேதி ஒருவர், 7-ந்தேதி 3 பேர், 8-ந்தேதி ஒருவர், 9-ந்தேதி 2 பேர், 10-ந்தேதி 4 பேர், 11-ந்தேதி 5 பேர், 12-ந்தேதி 3 பேர், 13-ந்தேதி 3 பேர், 14-ந்தேதி 7 பேர்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 61 பேர் கொரோனா பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 30 ஆயிரத்து 272 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 1764 பேர் இறந்தனர். தற்போது 25 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ரு வருகிறார்கள்.
- சேலம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.
- ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சேலம்:
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் சுகாதார துறையினர், மருத்துவ துறையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை கொரோனா பாதிப்பு இல்லை. பின்னர் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.
பின்பு பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 26 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 257 ஆகவும் இருந்தது. 1764 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கபப்ட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிகிச்சை பெற்ற 5 பே ர்குணம் அடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவைட்க்கையை தீவிரப்படுத்தி உள்ளது.






