search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inception"

    • ரூ.125 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 500 நகர்ப்பற நல வாழ்வு மையங்களை, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார்.
    • பொதுமக்களுக்கு மிக அருகிலேயே தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும்.

    நாமக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மருத்துவத் துறையின் மூலம் ரூ.125 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 500 நகர்ப்பற நல வாழ்வு மையங்களை, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார்.

    இந்த நல வாழ்வு மையங்களில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு ஆய்வாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியமர்த்தப்பட்டு, பொதுமக்களுக்கு மிக அருகிலேயே தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும்.

    இந்த திட்டத்தின்கீழ், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொசவம்பட்டி, போதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதைத் தொடர்ந்து, நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, தெற்கு நகர தி.மு.க செயலாளர் ராணா ஆனந்த், நகராட்சி கமிஷனர் ஆணையாளர் சென்ன கிருஷ்ணன், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • புதுப்பிக்கப்பட்ட தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவனை மீண்டும் செயல்பட தொடங்கியது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு சங்கத்தின் மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 49 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடன், விவசாயக்கடன், மகளிர் சுய உதவிக்கடன் மற்றும் சிறுதொழில் கடன்களுக்கான அனுமதி ஆணைக்கடிதத்தை வழங்கினார்.

    இதில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், மருத்துவமனை நிர்வாக தலைவர் பழனிசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மற்றும்கலந்து கொண்டனர்.

    தமிழகத்தின் ஒரே கூட்டுறவு மருத்துவமனை என்ற சிறப்பு வாய்ந்த தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு புத்துயிர் கொடுத்து பொலிவுடன் மீண்டும் செயல்பட வைத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டினர்.

    ×