search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in moped collision"

    • இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு செங்குத்தம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    முருகன் பவானி-பெருந்துறை ரோட்டில் சைக்கிளில் ெசனறு கொண்டு இருந்தார். அப்போது அநத வழியாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குமார் (25) என்பவர் ெமாட்டில் வந்தார். அப்போது மொபட் எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.

    இதில் சைக்கிளில் இருந்து முருகன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் கனேஸ்வரர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×