search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ilavarasu"

    • பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.
    • ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார்.

    சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். மேயாத மான் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

    பின் பிப்ரவரி மாதம் ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25 ஆவது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் சென்ற வாரம் நிறைவடைந்தது. அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைபவை வாழ்த்தி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படம் வெளியாகும் தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்
    • டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களில் வலம் வருபவர் நடிகர் வைபவ். சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் தயாரித்தது. மேயாத மான் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

    பின் பிப்ரவரி மாதம் வெளியான ரணம் அறம் தவறேல் படத்தில் ஷெரிஃப் இயக்கத்தில் நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25 ஆவது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் வைபவின் அடுத்த படமான சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    மோஷன் போஸ்டரில் ஒரு கூட்டம் வங்கியை திருடிக் கொண்டு இருக்கின்றனர். பின் அவர்களின் பெயர்கள் போலிஸ் தேடும் முக்கிய குற்றவாளி பட்டியலில் இருக்கிறார்கள். பின் அவர்களை போலீஸ் துரத்துவது போன்ற காட்சிகள் மோஷன் போஸ்டரில் அமைந்துள்ளது. சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஒரு நல்ல காமெடி படமாக அமையும் என எதிர் பார்க்கப் படுகிறது. படம் வெளியிடும் தேதி குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த விவகாரத்தை கைவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

    தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.


    இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ஆம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி நடிகர் இளவரசு 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை நிலைபாடு என்ன என்ற கேள்வியை எழுப்பினார். மன்னிப்பு கேட்டதால் இந்த விவகாரத்தை கைவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

    மேலும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு புகார் 2018-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது இன்னும் முழுமையான விசாரணை நடத்தி முடிக்கவில்லை என்ற அதிருப்தியை நீதிபதி பதிவு செய்தார். தொடர்ந்து, இளவரசு புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாண்டிபஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர்களாக இருந்த அனைவரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

    • ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
    • இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.


    இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ஆம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மொபைல் அழைப்புகளையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மொபைல் லோகேஷன் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இளவரசு 12-ஆம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


    காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான ஆவணங்கள் இருக்கிறது நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்த நீதிபதி இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி இளவரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார். 

    ×