என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ilaiyaraaja songs"

    • இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

    இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள முக்கியஸ்தர்கள், நடிகர்கல், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது

    "எனது பிறந்தநாளிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி. இந்த நாளில் ஒரு இனிமையான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை , அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன், இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்"

    தூங்காமல் முரண்டு பிடித்த யானைக்கு இளையராஜாவின் பாட்டைப் பாடித் தூங்க வைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த பாகன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. #Ilaiyaraaja

    திருச்சூர்:

    கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் யானை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த யானை கடந்த சில நாள்களாக தூங்குவதற்கு சிரமப்பட்டுவந்து இருக்கிறது.

    யானையின் தூக்க மின்மையை போக்க யானைக்கு தாலாட்டாக ஒரு சினிமா பாடலை பாடியுள்ளார். அந்த பாடலில் மயங்கி யானை தூங்கி இருக்கிறது. இப்போது தினமும் அந்த பாடலை பாடியே தூங்க வைக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பாகன் பாடும் மலையாள பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா. 1984ம் ஆண்டு வெளியான ‘மங்களம் நேருன்னு’ என்ற மலையாளப் படத்தில் உள்ள ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடலைத்தான் பாகன் பாடுகிறார்.

    இந்தப் படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார், கிருஷ்ண சந்திரன் என்பர் இந்தப் பாடலை பாடியுள்ளார். ‘இளையராஜா இசை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனப் பலர் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது அது யானைக்கும் பிடித்துள்ளது. அவரது இசை என்றும் மறையாது’ என சமூகவலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். #Ilaiyaraaja

    ×